தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ உரிய ஆவணமில்லாத ரூ.1.73 கோடி பறிமுதல்

உரிய ஆவணமில்லாத ரூ.1.73 கோடி பறிமுதல்

உரிய ஆவணமில்லாத ரூ.1.73 கோடி பறிமுதல்


ADDED : ஆக 02, 2026 08:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 02, 2026 08:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

செங்குன்றம்: ஆந்திர லாரியில், உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட 1.73 கோடி ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

செங்குன்றம், மொண்டியம்மன் கோவில் சோதனைச் சாவடியில், செங்குன்றம் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக வந்த, ஆந்திர பதிவெண் கொண்ட லாரியை மறித்து சோதனை செய்தனர்.

அதில், உரிய ஆவணங்களின்றி, 1.73 கோடி ரூபாய் எடுத்து சென்றது தெரிந்தது. இதையடுத்து, லாரியில் இருந்த இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில், ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த பிரவீன், 36 மற்றும் பவன்குமார், 28, என்பது தெரிய வந்தது.

விசாரணையின்போது, தங்க நகை வாங்குவதற்காக, சென்னைக்கு பணம் கொண்டு வந்ததாக அவர்கள் தெரிவித்த நிலையில், உரிய ஆவணங்கள் இல்லாததால், போலீசார் இருவரிடம் இருந்து, மூன்று மொபைல்போன்கள் மற்றும் 1.73 கோடி ரூபாயை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us