/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்சார ரயிலில் 'வித் அவுட்' பயணம் 1,300 பேருக்கு ரூ.3.5 லட்சம் அபராதம்
/
மின்சார ரயிலில் 'வித் அவுட்' பயணம் 1,300 பேருக்கு ரூ.3.5 லட்சம் அபராதம்
மின்சார ரயிலில் 'வித் அவுட்' பயணம் 1,300 பேருக்கு ரூ.3.5 லட்சம் அபராதம்
மின்சார ரயிலில் 'வித் அவுட்' பயணம் 1,300 பேருக்கு ரூ.3.5 லட்சம் அபராதம்
ADDED : மே 01, 2024 12:30 AM
சென்னை,சென்னை மின்சார ரயில்களில் டிக்கெட் இன்றி பயணம் செய்த வர்களிடம் 3.5 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை ரயில்வே கோட்டத்தில் இயக்கப்பட்ட 264 மின்சார ரயில்களில் ஆர்.பி.எப்., வீரர்களுடன் இணைந்து, 160 டிக்கெட் பரிசோதகர்கள் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் டிக்கெட் இன்றி பயணம், சாதாரண டிக்கெட் எடுத்து முதல் வகுப்பில் பயணம் என, பல்வேறு வகைகளில் முறைகேடாக பயணம் செய்த 1,300 பேர் பிடிப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3.5 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
சென்னை ரயில்வே கோட்ட மின்சார ரயில்கள், ரயில் நிலையங்களில், அடுத்த 15 நாட்களுக்கு சோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.