sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஒப்பந்த ஊழியர்களுக்கு 5ம் தேதிக்குள் ஊதியம்

/

ஒப்பந்த ஊழியர்களுக்கு 5ம் தேதிக்குள் ஊதியம்

ஒப்பந்த ஊழியர்களுக்கு 5ம் தேதிக்குள் ஊதியம்

ஒப்பந்த ஊழியர்களுக்கு 5ம் தேதிக்குள் ஊதியம்


ADDED : செப் 12, 2024 12:10 AM

Google News

ADDED : செப் 12, 2024 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, 'மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்களுக்கு, இனி மாதம் 5ம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும்' என, மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சியில், தேசிய நகர்ப்புற வாழ்வாதார பணி மற்றும் ஒப்பந்த பணிகளில் ஈடுபடுவோருக்கு, மாத ஊதியம் மிகவும் தாமதமாக கிடைக்கிறது.

இதுகுறித்து, மாதாந்திர கவுன்சில் கூட்டத்தில், கவுன்சிலர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.

இதைத்தொடர்ந்து, 'ஒருங்கிணைந்த வங்கி கணக்கில் மாதந்தோறும், 5ம் தேதி வேலை நாளில், ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்' என, மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் உத்தரவிட்டு உள்ளார்.

உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாது: முக அங்கீகார முறைமையை பயன்படுத்தி, 1ம் தேதி முதல் 30 அல்லது 31ம் தேதி வரை வருகைப்பதிவு கணக்கிடப்பட வேண்டும். இந்த வருகைப்பதிவு, சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களில், நிர்வாக அலுவலரால் உறுதி செய்யப்பட வேண்டும்.

அதன்படி, ஒவ்வொரு மாதமும் உரிய நேரத்தில் ஊதியம் வழங்கி, பணியாளர்களின் நலனை காக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு ள்ளது.






      Dinamalar
      Follow us