sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அரசு அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்சம் வசூல் மழை! காஞ்சியில் அடுத்தடுத்து 13 பேர் கைதாகியும் பயமில்லை

/

அரசு அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்சம் வசூல் மழை! காஞ்சியில் அடுத்தடுத்து 13 பேர் கைதாகியும் பயமில்லை

அரசு அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்சம் வசூல் மழை! காஞ்சியில் அடுத்தடுத்து 13 பேர் கைதாகியும் பயமில்லை

அரசு அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்சம் வசூல் மழை! காஞ்சியில் அடுத்தடுத்து 13 பேர் கைதாகியும் பயமில்லை


ADDED : மே 30, 2024 11:58 PM

Google News

ADDED : மே 30, 2024 11:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், : அரசு அலுவலகங்களில் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவது அதிகரித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும், இரு ஆண்டுகளில் லஞ்சம் வாங்கும் போது சிக்கி, 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும், மாநகராட்சி, தாலுகா உள்ளிட்ட அலுவலகங்களில், லஞ்சம் வாங்குவது தடுக்க முடியாததாகவே உள்ளது.

தாலுகா, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வட்டார வளர்ச்சி, கோட்டாட்சியர், நகர ஊரமைப்பு, சார் - பதிவாளர் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், லட்சக்கணக்கில் பணம் புழங்கும் இடங்களாக மாறிவிட்டன.

இவற்றில், அதிகாரிகள் முதல் இடைத்தரகர்கள் வரை பலரும் புகுந்து விளையாடுகின்றனர். லஞ்சம் கேட்பதால் வெகுண்டு எழும் சொற்ப பேர் மட்டுமே அளிக்கும் புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுத்து, கையும் களவுமாக அதிகாரிகளை கைது செய்கின்றனர். அதிலும், சிலர் தப்புகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2022 ஜூன் முதல் 2024 மே வரையிலான இரு ஆண்டுகளில் மட்டும், ஏழு வழக்குகளில், ஒரு ஊராட்சி தலைவர் மற்றும் 12 அரசு ஊழியர்கள், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கடந்த 2023ல் மட்டும், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில், ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.

 2022 ஜூன் மாதம், குணகரம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார், பட்டா மாற்றம் செய்ய 6,000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார்

 2023 பிப்ரவரியில், சிறுகாவேரிப்பாக்கம் ஆட்டோமொபைல் துறை உதவி பொறியாளர் மோகன், பணிமனை அலுவலர் முரளி ஆகிய இருவரும், மெக்கானிக் ஷாப் அனுமதி வழங்க 30,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய போது கைது செய்யப்பட்டனர்

 2023 மார்ச்சில், அய்யங்கார்குளம் ஊராட்சியில் வீடு கட்ட அனுமதி வழங்க ஊராட்சி தலைவர் வேண்டா, ஊராட்சி செயலர் புவனா ஆகியோர் 15,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய போது சிக்கினர்

 2023 ஆகஸ்டில், அரும்புலியூர் கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன், கிராம உதவியாளர் கவியரசு ஆகிய இருவரும், பட்டா மாற்றம் செய்ய 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய போது கைது செய்யப்பட்டனர்

 2023 ஆகஸ்டில், காஞ்சிபுரம் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் போலி பத்திரம் ரத்து செய்ய, 1 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, உதவியாளர் நவீன், பணியாளர் சந்தோஷ் ஆகிய இருவர் கைதாகினர்

 2023 ஆகஸ்டில், காஞ்சிபுரம் மாநகராட்சி வரி விதிப்பு அலுவலர் ரேணுகா, வரி விதிப்பு பெயர் மாற்றம் செய்ய 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டார்

 2024 ஜனவரியில், வீடு கட்ட அனுமதி வழங்க 24,000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, குன்றத்துார் நகராட்சி கமிஷனர் குமாரி, நகரமைப்பு அலுவலர் பாலசுப்ரமணி, உதவியாளர் சாம்சன் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனராக பணியாற்றி வந்த பழனி, வருமானத்திற்கு அதிகமாக 1.80 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக, காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அவர் மீது கடந்த 14ம் தேதி வழக்குப்பதிவு செய்து, அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

அதேபோல், காஞ்சிபுரம் அடுத்த ஆற்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சர்வே ஆய்வாளர் பாஸ்கர் தற்போது ஊட்டியில் பணியாற்றி வருகிறார். இவர், வருமானத்திற்கு அதிகமாக 2.9 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக, காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், கடந்த 21ம் தேதி வழக்குப்பதிவு செய்து, அவரது வீடு, உறவினர் வீடுகளில் சோதனை நடத்தினர்.

ஒரே மாதத்தில், இரு அரசு அதிகாரிகள் மீது சொத்து குவிப்பு வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் தொடர் நடவடிக்கை இருந்தும், அரசு அதிகாரிகள், பயமின்றி லஞ்சம் வாங்குவது அதிகரித்து வருகிறது. பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததே, இவ்வகை குற்றம் அதிகம் நடப்பதாக, காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூறினர்.

அரசு அலுவலகங்களில், அரசின் சேவை பெற விண்ணப்பிக்கும் பொதுமக்கள், லஞ்சம் கொடுக்கக்கூடாது என்ற மன நிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

0 ஆண்டுகளாக 'ஆட்டம்'

சென்னை சேப்பாக்கம், எழிலகம் வளாகத்தில் நீர்வளத்துறை தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. இதேபோல, தரமணியில் மற்றொரு நீர்வளத்துறை வளாகம் உள்ளது.இங்கு, மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆய்வு மையம், நீராய்வு மற்றும் தரக் கட்டுப்பாடு மையம், நீர்வள மேலாண்மை முகமை, அணைகள் பாதுகாப்பு பிரிவு, மண் பரிசோதனை மையம் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்படுகின்றன.இவற்றில், ஹோட்டல்கள், கல்வி நிறுவனங்களில் நிலத்தடி நீர் குழாய்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்குவதால், கட்டுமானப் பணிகளுக்கு மண் பரிசோதனை செய்தல் உட்பட பல பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இந்த அலுவலகத்தில் எந்த பணி நடக்க வேண்டும் என்றாலும், கமிஷன் கொடுத்தால் மட்டுமே காரியம் ஆகிறது. இங்கு பணிபுரிவோர் மதியம் 12:00 மணிக்கு வந்து, மாலை 4:00 மணிக்கு வீட்டிற்கு புறப்படுகின்றனர். அந்த நேரத்தில் வந்தால் மட்டுமே, தங்கள் வேலையை பொதுமக்கள் முடித்து கொள்ள முடியும்.இந்த அலுவலகங்களில் 10 முதல் அதிகபட்சமாக 15 ஆண்டுகளுக்கும் மேலாக, பலர் ஒரே இடத்தில் பணிபுரிந்து வருகின்றனர். பதவி உயர்வு வந்தாலும், கவனிக்க வேண்டியவர்களை கவனித்து, அதே வளாகத்தில் பணிபுரிகின்றனர். இந்த வளாகம் 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதுவரை துறையின் அமைச்சர்களாக இருந்தவர்கள் மட்டுமின்றி செயலர்களும் பணி நிமித்தமாக இங்கு வந்ததில்லை.பாதுகாப்பான இடம் என்பதால், இங்குள்ள ஆய்வு மாளிகைக்கு மட்டும் முன்னாள் அமைச்சர்கள் சிலர், இரவு நேரங்களில் வந்து தங்கியுள்ளனர். நீர்வளத்துறையின் கீழ் இயங்கினாலும், தொடர்பு எல்லைக்கு வெளியே இந்த அலுவலகம் உள்ளது. எனவே, லஞ்ச ஒழிப்பு துறையின் கண்ணில் படாத அளவிற்கு அலுவலகம் இயங்கி வருகிறது.








      Dinamalar
      Follow us