/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மோசமான சாலையால் பள்ளி குழந்தைகள் அவதி
/
மோசமான சாலையால் பள்ளி குழந்தைகள் அவதி
ADDED : ஆக 20, 2024 12:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நன்மங்கலம் ஊராட்சி, நேரு நகரில், 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயிலும் தனியார் பள்ளி, 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இங்கு சாலை வசதி வேண்டி, ஐந்து ஆண்டுகளாக ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் பலனில்லை.
சிறு மழை பெய்தாலும், சாலையில் தண்ணீர் தேங்கி, பள்ளி செல்லும் குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், சாலை வசதியை ஏற்படுத்த வேண்டும்.
- கே.திலகவதி, 42, நன்மங்கலம்.