sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தங்காவதீஸ்வரர் கோவில் சிவன், பார்வதி சிலை திருட்டு

/

தங்காவதீஸ்வரர் கோவில் சிவன், பார்வதி சிலை திருட்டு

தங்காவதீஸ்வரர் கோவில் சிவன், பார்வதி சிலை திருட்டு

தங்காவதீஸ்வரர் கோவில் சிவன், பார்வதி சிலை திருட்டு


ADDED : ஆக 05, 2024 01:07 AM

Google News

ADDED : ஆக 05, 2024 01:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் மேட்டுத் தெருவில், தங்காவதீஸ்வரர் கோவில் உள்ளது. வழக்கம்போல், நேற்று காலை அர்ச்சகர் ரமேஷ், கோவிலை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. ஓரடி உயர சிவன் சிலையும், முக்கால் அடி உயர பார்வதி சிலையும் திருட்டு போயிருந்தன. இவை பித்தளையால் ஆனவை. சிவ காஞ்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

இது குறித்து, கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி கூறியதாவது:

இந்த கோவிலுக்கு, 2012ம் ஆண்டு பிரதோஷ சிவன் மற்றும் பார்வதி சிலையை உபயதாரர் ஒருவரால் கொடுக்கப்பட்டு இருந்தது.

கோவில் முறை செய்பவர்கள், பிரதோஷம் முடிந்த பின், சிலைகளை வீட்டிற்கு எடுத்துச் சென்றுவிடுவது வழக்கம்.

தற்போது இருக்கும் முறைக்காரர், புதியவர் என்பதால் சிலைகளை கோவில் வளாகத்தில் வைத்திருக்கிறார். இதை மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us