sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கிண்டியில் மண் சரிந்த இடத்தில் எலும்புக்கூடு கண்டெடுப்பு

/

கிண்டியில் மண் சரிந்த இடத்தில் எலும்புக்கூடு கண்டெடுப்பு

கிண்டியில் மண் சரிந்த இடத்தில் எலும்புக்கூடு கண்டெடுப்பு

கிண்டியில் மண் சரிந்த இடத்தில் எலும்புக்கூடு கண்டெடுப்பு


ADDED : செப் 06, 2024 12:43 AM

Google News

ADDED : செப் 06, 2024 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிண்டி, சென்னையில் கடந்தாண்டு, டிச., 4ம் தேதி, மழை காரணமாக கிண்டி, மடுவாங்கரை அருகே ஐந்து பர்லாங் சாலையில், பெரிய பள்ளம் விழுந்தது.

தனியார் நிறுவனம் அங்கு கட்டுமான பணி மேற்கொண்ட நிலையில், அந்த இடத்தை ஒட்டியுள்ள எரிவாயு நிரப்பும் நிலையத்தின் அறை, கன்டெய்னரில் இயங்கியது.

திடீர் பள்ளத்தால், பணியில் இருந்த பங்க் ஊழியர்கள், கட்டுமான பணியில் இருந்தோர் பள்ளத்தில் சிக்கினர். ஐந்து நாள் தேடுதல் பணிக்குப் பின் நரேஷ், 24, ஜெயசீலன், 29, ஆகியோர் மீட்கப்பட்டனர்.

இந்த பள்ளத்தில், மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த தீபக் பக்டி, 27, என்பவர் சிக்கியதாக கூறப்பட்டது. இரு மாதங்களுக்கு முன் இந்த பள்ளத்தை மூடி சீரமைத்தனர்.

தற்போது, பள்ளம் விழுந்த பகுதியில் கட்டுமான பணி மீண்டும் துவங்கிய நிலையில், மனித மண்டை ஓடு, எலும்புக்கூடு கிடைத்தன. தகவலின்படி வந்த கிண்டி போலீசார், அதை ஆய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இது தீபக் பக்டியின் எலும்புக்கூடாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தடயவியல் ஆய்வுக்குப் பின், விபரம் தெரியவரும்.






      Dinamalar
      Follow us