/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாமியார் மண்டையை உடைத்த மருமகன் கைது
/
மாமியார் மண்டையை உடைத்த மருமகன் கைது
ADDED : ஜூலை 06, 2024 12:44 AM
எம்.கே.பி.நகர், :வியாசர்பாடி, சாஸ்திரி நகர், ஏழாவது தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, 60; கட்டட தொழிலாளி. இவரது மனைவி அமுதா, 58.
அதே பகுதியைச் சேர்ந்த முருகன், 41, என்பவருக்கு, இவர்களது மகள் கவிதாவை திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
முருகன் தினமும் குடித்து வந்து, கவிதாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனால் விரக்தியடைந்த கவிதா, யாரிடமும் கூறாமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
மனைவி வீட்டை விட்டுச் சென்றதால் ஆத்திரமடைந்த முருகன், மாமியார் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது, மாமியார் அமுதாவை இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளார்.
இதில் தலை, மூக்கு, பற்கள் உடைந்து, அவர் படுகாயமடைந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து எம்.கே.பி.நகர் போலீசார் வழக்கு பதிந்து, வியாசர்பாடி, பி.வி.காலனி ஒன்பதாவது தெருவைச் சேர்ந்த முருகனை நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.