sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

குடிநீர் இணைப்பு வழங்கும் பணி மடிப்பாக்கத்தில் சிறப்பு முகாம்

/

குடிநீர் இணைப்பு வழங்கும் பணி மடிப்பாக்கத்தில் சிறப்பு முகாம்

குடிநீர் இணைப்பு வழங்கும் பணி மடிப்பாக்கத்தில் சிறப்பு முகாம்

குடிநீர் இணைப்பு வழங்கும் பணி மடிப்பாக்கத்தில் சிறப்பு முகாம்

3


ADDED : ஜூன் 09, 2024 01:19 AM

Google News

ADDED : ஜூன் 09, 2024 01:19 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மடிப்பாக்கம்:பெருங்குடி மண்டலத்தின்,188வது வார்டுக்கு உட்பட்ட மடிப்பாக்கம் பகுதியில் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான சிறப்பு முகாம் நேற்று நடந்தது. முதல் கட்டமாக, 1,700 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின், பெருங்குடி மண்டலம், 187, 188வது வார்டுகளுக்கு உட்பட்ட மடிப்பாக்கம் பகுதியில் ஒருங்கிணைந்த குடிநீர் வழங்கல் திட்டப் பணி நிறைவடைந்துள்ளது. இதற்காக, வேளச்சேரி-தாம்பரம் சாலை, மயிலை பாலாஜிநகரில் பிரம்மாண்ட நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டது.

அதிலிருந்து மடிப்பாக்கம் பகுதிக்கு இணைப்பு கொடுத்த நிலையில், கடந்த மாதம் நீர் செலுத்தி கசடுகள் அகற்றப்பட்டன.

பின், மடிப்பாக்கம், ராஜலட்சுமிநகர், ராஜராஜேஸ்வரிநகர், மகாலட்சுமிநகர், டாக்டர் ராமமூர்த்தி நகர், பெரியார்நகர், கோவிந்தசாமிநகர், அண்ணாநகர், செந்தில்நகர் ஆகிய பகுதிகளில் சோதனை வெள்ளோட்டம் முடிந்து உள்ளது.

இந்நிலையில், இணைப்பு கொடுக்கும் பணிகள் துவக்கப்பட உள்ளன. அதற்காக, 188வது வார்டில் நேற்று குடிநீர் இணைப்பு வழங்கும் முகாம் நடந்தது. இதில், சம்பந்தப்பட்ட பகுதிவாசிகள் பங்கேற்றனர்.

அவர்களின் குடிநீர் இணைப்பிற்கான ஆவணங்கள் சரிபார்க்கும் பணி நடந்தது. இதையடுத்து, குடிநீர் இணைப்பு வழங்கும் பணி விரைவில் துவக்கப்பட உள்ளது.

குடிநீர் வாரியத்தினர் கூறியதாவது:

பெருங்குடி மண்டலம், மடிப்பாக்கத்தில் உள்ள 187, 188 ஆகிய இரண்டு வார்டிலும், 9,000 குடியிருப்புகள் உள்ளன.

இதனை பத்து கட்டமாக பிரித்து, குடிநீர் வினியோகம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, 1,700 குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி விரைவில் துவக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us