sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

திருமணத்தில் பட்டாசு வெடித்ததால் விபரீதம் விளையாட்டு பொருட்கள் கடை தீக்கிரை

/

திருமணத்தில் பட்டாசு வெடித்ததால் விபரீதம் விளையாட்டு பொருட்கள் கடை தீக்கிரை

திருமணத்தில் பட்டாசு வெடித்ததால் விபரீதம் விளையாட்டு பொருட்கள் கடை தீக்கிரை

திருமணத்தில் பட்டாசு வெடித்ததால் விபரீதம் விளையாட்டு பொருட்கள் கடை தீக்கிரை


ADDED : ஜூன் 03, 2024 02:08 AM

Google News

ADDED : ஜூன் 03, 2024 02:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அம்பத்துார்:அம்பத்துார், சி.டி.எச்., சாலை, டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அருகே, யுவதயாளன், 45, என்பவர் 'தருணன் வேர்ல்டு' என்ற பெயரில், விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். யோகாவில் கின்னஸ் சாதனை செய்துள்ள இவர், தற்போது வெளிநாட்டில் உள்ளார்.

நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, அவரது கடைக்கு அருகில் உள்ள மண்டபத்தில், திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.

அதில், பட்டாசு வெடித்ததாக கூறப்படுகிறது. அதிலிருந்து வெளியேறிய தீப்பொறி, யுவதயாளன் கடையின் முன் வைத்திருந்த பேப்பர், பிளாஸ்டிக் பொருட்கள் மீது விழுந்தது. இதில் தீப்பிடித்து, கடை முழுதும் பரவியது. அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், அங்கிருந்து வெளியேறி தப்பினர்.

தீ விபத்தால், சி.டி.எச்., சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், தீயணைப்பு வாகனங்கள், சம்பவ இடத்திற்கு வர தாமதமாகின.

அம்பத்துார், ஜெ.ஜெ., நகர், ஆவடி, வில்லிவாக்கம், மதுரவாயல் பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள், 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள், கடையில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள விளையாட்டு உபகரணங்கள் தீக்கிரையாகின. அதேபோல், அம்பத்துார் தொழிற்பேட்டை, தெற்கு பேஸ், 7வது தெருவில் உள்ள 'எசன்ஸ் ஹீட் டிரிட்டர்ஸ்' என்ற பெயரில், இரும்பு எக்கு கம்பெனியிலும், தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து, மேற்கண்ட கடையில் தீயை அணைத்த வீரர்கள், தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு, இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இரும்பு எக்கு பொருட்கள் கூலண்டு ஆயிலில் குளிர் படுத்தும்போது, திடீரென தீப்பற்றியதாக கூறப்படுகிறது. இரு தீ விபத்துகள் குறித்து, அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us