
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள குமார ராணி செட்டிநாடு வித்யாலயா பள்ளியின் 39ம் ஆண்டு விளையாட்டு தினம் நடந்தது.
இதில், வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு 'கெட்டில் பெல்' விளையாட்டின் தென்னக முதல் உலக சாம்பியன் விக்னேஷ் ஹரிஹரன் பரிசுகளை வழங்கினார். தலைமை ஆசிரியர் ராஜலட்சுமி, முதல்வர் அமுதலட்சுமி, துணை முதல்வர் தாரணி கணேசன், உதவி தலைமை ஆசிரியை காயத்ரி மற்றும் பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.