/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தொட்டியில் விழுந்த புள்ளிமான் பலி
/
தொட்டியில் விழுந்த புள்ளிமான் பலி
ADDED : மே 30, 2024 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, ஆவடி அடுத்த மேலப்பேடு பகுதியில் நேற்று நள்ளிரவு, வெங்கல் வனத்தில் இருந்து ஒன்றரை வயது புள்ளிமான் வழிதவறி வந்துள்ளது. நாய்கள் துரத்தியதில், மேலப்பேடு பகுதியில், நீரில்லா கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளது.
நேற்று காலை 6:00 மணி அளவில், அப்பகுதிவாசிகள் பார்த்து, செங்குன்றம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். குழிக்குள் இறங்கிய மீட்புக்குழுவினர், மானை மீட்டனர். மருத்துவ பரிசோதனையில் மான் இறந்தது தெரியவந்தது.