ADDED : ஜூன் 27, 2024 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணியர் விமானம், இலங்கை தலைநகர் கொழும்புவிலிருந்து தினமும் அதிகாலை 3:00 மணிக்கு, சென்னையை வந்தடையும். சென்னை விமான நிலையத்தில் இருந்து அதிகாலை 4:00 மணிக்கு, இலங்கைக்கு செல்லும்.
அதேபோல், மதியம் 2:10 மணிக்கு வரும் ஸ்ரீலங்கன் விமானம், மாலை 4:05 மணிக்கு, இலங்கைக்கு செல்லும். இந்த 2 வருகை, 2 புறப்பாடு என, நான்கு விமான சேவைகளை, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம், நிர்வாக காரணங்களுக்காக நேற்று ரத்து செய்தது.
இதனால், இலங்கைக்கு செல்லும் பயணியர் மட்டுமின்றி, ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேஷியா, ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் டிரான்சிட் பயணியரும் பாதிக்கப்பட்டனர்.