ADDED : ஜூலை 16, 2024 12:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோரி, தென்னக ரயில்வே மஸ்துார் யூனியன் எனப்படும் எஸ்.ஆர்.எம்.யு., சார்பில், சென்னை உட்பட பல்வேறு இடங்களில், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சென்னை ரயில் கோட்டத்தில், சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், அரக்கோணம், காட்பாடி உள்ளிட்ட இடங்களில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணிக்கு துவங்கி நேற்று மாலை 6:00 மணி வரை ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதே போல, சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட ஆறு ரயில்வே கோட்டங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

