தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அஞ்சல்தலை சேகரிப்பு பயிற்சி முகாம்

அஞ்சல்தலை சேகரிப்பு பயிற்சி முகாம்

அஞ்சல்தலை சேகரிப்பு பயிற்சி முகாம்


ADDED : மே 01, 2024 12:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 01, 2024 12:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, சென்னை, அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் உள்ள அஞ்சல்தலை சேகரிப்பு மையம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான அஞ்சல்தலை சேகரிப்பு குறித்த கோடைக்கால பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.

மே, 10---- 11, 17-- 18 மற்றும் 24-- 25ம் தேதிகள் என மூன்று பிரிவுகளாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பிரிவிலும், 25 மாணவர்கள் வீதம், 75 பேர் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

இப்பயிற்சி முகாமில், அஞ்சல்தலை சேகரிப்பு குறித்த அறிமுகம், அஞ்சல்தலை சேகரிப்பு கண்காட்சியில் பங்கேற்க எவ்வாறு தயாராக வேண்டும், கடிதம் எழுதுதல், தகவல் தொடர்பு திறன், அஞ்சலகங்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து கற்றுத் தரப்படுகிறது.

ஆறாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பயிற்சியில் சேரலாம். பதிவுக் கட்டணம் 250 ரூபாய்.

தகவல்களுக்கு, 94449 33467, 98848 32872, 99529 65458 மற்றும் 044-2854 3199 ஆகிய எண்களில் வார வேலை நாட்களில் காலை 10:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us