sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாநில பாடத்திட்டத்தால் முன்னேற்றம் சேப்பாக்கத்தில் சான்றோர்கள் பேச்சு

/

மாநில பாடத்திட்டத்தால் முன்னேற்றம் சேப்பாக்கத்தில் சான்றோர்கள் பேச்சு

மாநில பாடத்திட்டத்தால் முன்னேற்றம் சேப்பாக்கத்தில் சான்றோர்கள் பேச்சு

மாநில பாடத்திட்டத்தால் முன்னேற்றம் சேப்பாக்கத்தில் சான்றோர்கள் பேச்சு


ADDED : செப் 06, 2024 12:54 AM

Google News

ADDED : செப் 06, 2024 12:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, எவர்வின் பள்ளி குழுமத்தின் நிறுவனர் புருஷோத்தமன் எழுதிய 'கற்பிக்கும் இதயம் மற்றும் கலை' - 'தி ஹாட் அண்டு ஆர்ட் ஆப் டீச்சிங்' என்ற ஆங்கில புத்தகம் வெளியீட்டு விழா, சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில், நேற்று நடந்தது.

புத்தகத்தை, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் வெளியிட்டு பேசியதாவது:

என்.சி.எப்., எனும் தேசிய பாடத்திட்ட வடிவமைப்பு குறித்தும், மாநில பாடத்திட்டம் குறித்தும், கல்வியாளர்கள் மேடையில் பேசியது பெருமையாக உள்ளது.

நாங்கள் பேசுவதைவிட, கல்வியாளர்கள், அரசு பள்ளி தலைமையாசிரியர்கள், மாநில பாடத்திட்டம் குறித்து பெருமையாக எடுத்துச் சொல்லவேண்டும்.

உங்களை போன்றோர் பதிலே, யார், யாரெல்லாம் நம்மை குறித்து பேசுகின்றனரோ அவர்களுக்கு பதிலாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

எவர்வின் பள்ளி குழுமத்தின் நிறுவன மூத்த முதல்வர் புருஷோத்தமன் பேசுகையில், ''தமிழகத்தில் இருக்கும் மகத்தான டாக்டர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் 99 சதவீதம் பேர், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் தான்.

பெற்றோர் பொறுமையோடு தொடர்ந்து ஊக்குவித்தால், எந்த பாடத்திட்டமாக இருந்தாலும் மாணவர்களால் ஜெயிக்க முடியும் என்பதை, நான் அனுபவத்தில் கற்ற விஷயம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us