sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பூங்கா அமைக்கும் பணிகள் நிறுத்தம்

/

பூங்கா அமைக்கும் பணிகள் நிறுத்தம்

பூங்கா அமைக்கும் பணிகள் நிறுத்தம்

பூங்கா அமைக்கும் பணிகள் நிறுத்தம்


ADDED : ஜூலை 09, 2024 12:33 AM

Google News

ADDED : ஜூலை 09, 2024 12:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அண்ணா நகர், சென்னை மாநகராட்சி சார்பில்,'சிங்கார சென்னை 2.0' திட்டத்தின் கீழ், சென்னையை அழகுபடுத்தும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதில் குறிப்பாக, மேம்பாலங்கள் பல லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டு, அழகுபடுத்தப்பட்டன.

அதன்படி, அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட்ட அண்ணா நகர் 'ஆர்ச்' பகுதியில், நெடுஞ்சாலைத் துறையின் மேம்பாலத்தில், சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், சீரமைப்பு பணிகள் துவங்கின.

அங்குள்ள 48 துாண்களில், 10 லட்சம் ரூபாய் செலவில், வண்ணம் பூசுதல் மற்றும் வண்ண விளக்குகள் அமைத்தல் பணிகள் துவங்கின.

அதன் பின், போதிய நிதி இல்லாததால் பணிகள் அறைகுறையாக விடப்பட்டன. இதேபோல், மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் சிறிய அளவில் பூங்கா அமைக்கும் பணிகள் துவங்கின.

அதற்காக இடங்களை துாய்மைப்படுத்தி, சீரமைப்பு பணிகள் துவங்கின. செயற்பொறியாளர்கள் மாற்றத்திற்குப் பின், இப்பணிகளும் கிடப்பில் போடப்பட்டன.

இரண்டு ஆண்டுகளாகியும் பூங்கா பணிகள் துவங்காமல் இருப்பதால், தற்போது அந்த இடம், பழைய பொருட்கள் குவிக்கும் இடமாக மாறியுள்ளது.

இங்கு தற்போது, போக்குவரத்து பழைய சிக்னல் கம்பங்கள் உள்ளிட்ட பொருட்கள் தேங்கியுள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து, பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.






      Dinamalar
      Follow us