sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மகளிர் பள்ளி அருகே 'டாஸ்மாக்' ஆதனஞ்சேரியில் கடும் எதிர்ப்பு

/

மகளிர் பள்ளி அருகே 'டாஸ்மாக்' ஆதனஞ்சேரியில் கடும் எதிர்ப்பு

மகளிர் பள்ளி அருகே 'டாஸ்மாக்' ஆதனஞ்சேரியில் கடும் எதிர்ப்பு

மகளிர் பள்ளி அருகே 'டாஸ்மாக்' ஆதனஞ்சேரியில் கடும் எதிர்ப்பு


ADDED : ஜூலை 05, 2024 12:22 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 12:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

படப்பை, குன்றத்துார் ஒன்றியம், படப்பை ஊராட்சியில் 15,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். படப்பை ஊராட்சி ஆதனஞ்சேரி, ஷாம் நகரில் அரசு டாஸ்மாக் கடை மற்றும் மதுக்கூடம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என, படப்பை பொதுமக்கள், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

அதன் விபரம்:

ஆதனஞ்சேரி ஷாம் நகரில் டாஸ்மாக் கடை அமைய உள்ள இடத்தில் இருந்து, 300 மீட்டர் துாரத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சமரச சுத்த சன்மார்க் சங்கம், அரசு பேருந்து நிறுத்தம் உள்ளது.

இங்கு டாஸ்மாக் கடை அமைந்தால், பொதுமக்களுக்கும், மாணவியருக்கும் இடையூறாக இருக்கும். இக்கடை அமைப்பதை கைவிட்டு, வேறு பகுதியில் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

படப்பை அருகே, ஆரம்பாக்கத்தில் இரண்டு டாஸ்மாக் கடைகள் அமைந்திருந்தன. இங்கு, மது அருந்தி சிலர், பள்ளி மாணவியருக்கு தொல்லை கொடுத்தனர். பொதுமக்கள் எதிர்ப்பால் அந்த கடைகள் மூடப்பட்டன.

தற்போது, இந்த கடைக்கு மாற்றாக அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே டாஸ்மாக் கடை அமைக்கும் பணி நடப்பது வேதனையை அளிக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us