ADDED : ஜூன் 18, 2024 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிக்கரணை, பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் தீபக், 18. வேளச்சேரி குருநானக் கல்லுாரி மாணவர். நேற்று மதியம் 12.30 மணிக்கு, தன் நண்பர்களுடன் சேர்ந்து, பள்ளிக்கரணை அணை ஏரியில் ஆழமான பகுதியில் குளித்தார். அப்போது திடீரென தீபக், நீரில் மூழ்கி மாயமானார்.
இதுகுறித்து நண்பர்கள் அளித்த தகவல்படி, பள்ளிக்கரணை போலீசார், வேளச்சேரி தீயணைப்பு துறையினர் வந்தனர். படகு வாயிலாக, தீபக் குளித்த பகுதிக்கு சென்று தேடினர். ஆனால், உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து, மெரினா ஸ்கூப்பிங் டைவிங் பிரிவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், ஏரி நீரில் மூழ்கி, தீபக் உடலை கண்டுபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.