ADDED : மே 12, 2024 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரவாயல் :சென்னை, மதுரவாயல் பிரதான சாலையில் பெருமாள், 45 என்பவர், டீ கடை மற்றும் இளநீர் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை இந்த கடையில் இருந்த காஸ் சிலிண்டரில், திடீரென கசிவு ஏற்பட்டு தீ பற்றியது.
சிலிண்டர் வெடித்து விடுமோ என்ற அச்சத்தில், டீ குடிக்க வந்தவர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர். டீ கடை முழுதும் தீ பரவியது.
தகவல் கிடைத்து மதுரவாயல் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, தீயை அணைத்தனர். மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.