நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாலாஜாபாத், வாலாஜாபாத் ஒன்றியம், புத்தாகரம் பகுதியைச் சேர்ந்தவர் நிஜந்தன், 23; தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு, ஹோண்டா டியோ' இருசக்கர வாகனம் மூலம், சுங்குவார்சத்திரத்தில் இருந்து, வாலாஜாபாத் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
கட்டவாக்கம் கூட்டுச்சாலை அருகே வந்தபோது, காஞ்சிபுரத்தில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த அரசு பேருந்து, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.