ADDED : ஆக 08, 2024 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலையூர், சேலையூர் அடுத்த அகரம்தென் பகுதியில், சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த வட மாநில வாலிபர்களை, நேற்று முன்தினம் இரவு, ரோந்து பணியில் இருந்த போலீசார் பிடித்தனர்.
அவர்களின் உடைமைகளை சோதனை செய்ததில், 2.5 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.
விசாரணையில், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஷாமீம் அஹ்மத், 21, மொஹமத் இண்டியாஸ், 28 என்பதும், அங்கிருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இருவரையும், போலீசார் கைது செய்தனர்.