sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தெலுங்கானா குற்றவாளி சென்னை ஏர்போர்ட்டில் கைது

/

தெலுங்கானா குற்றவாளி சென்னை ஏர்போர்ட்டில் கைது

தெலுங்கானா குற்றவாளி சென்னை ஏர்போர்ட்டில் கைது

தெலுங்கானா குற்றவாளி சென்னை ஏர்போர்ட்டில் கைது


ADDED : ஆக 22, 2024 12:46 AM

Google News

ADDED : ஆக 22, 2024 12:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,

கொலை மிரட்டல் வழக்கில் தேடப்பட்டு வந்த தெலுங்கானா மாநில குற்றவாளி, சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

தெலுங்கானா மாநிலம், ராமகுண்டம் பகுதியை சேர்ந்தவர் சந்தீப் குமார் , 30. இவர் மீது 2016ம் ஆண்டு, வரதட்சணை கொடுமை, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ், ராமகுண்டம் மாநகர போலீஸ் கமிஷனரகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் எட்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார்.

இதையடுத்து, இவரை தேடப்படும் குற்றவாளியாக ராமகுண்டம் போலீசார் அறிவித்தனர். மேலும், அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல்.ஒ.சி., எனும் 'லுக் அவுட் சர்குலர்' அனுப்பப்பட்டது. இந்நிலையில்,நேற்று முன்தினம் இரவு, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு தனியார் பயணியர் விமானம் வந்தது. அதில் வந்திருந்த பயணியரின் பாஸ்போர்ட் மற்றும் பிற ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்தனர்.

சந்திப் குமாரும் அதில் வந்திருந்தார். அவரது பாஸ்போர்ட் மற்றும் அரசு ஆவணங்களை பரிசோதித்த போது, இவர் பல்வேறு வழக்குகளில் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பது தெரியவந்தது.

உடனடியாக அதிகாரிகள் அவரை பிடித்து, சென்னை விமான நிலைய போலீசாருக்கு தகவல் தந்தனர். அவர்கள், ராமகுண்டம் மாநகர போலீஸ் கமிஷனருக்கு தகவல் அளித்தனர். தெலுங்கானா மாநில தனிப்படை போலீசாரை சென்னைக்கு வரவழைத்து, அவர்களிடம் குற்றவாளியை ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us