ADDED : மே 16, 2024 12:35 AM
அ நிறம் | அளவு
குரோம்பேட்டை, தாம்பரம் மாநகராட்சி, 3வது மண்டலம் 34வது வார்டில், கங்கையம்மன் கோவில் குளம் உள்ளது. மழை காலத்தில் நிரம்பியகுளம் தற்போது வறண்டு கிடக்கிறது.
அதனால், இக்குளத்தை துார்வாரி ஆழப்படுத்தி, கோடையிலும் தண்ணீர் தேங்கியிருக்கும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு, தற்போது, சரியான நேரம் என்பதால், நிதி ஒதுக்கீடு செய்து, முன்வர வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
