ADDED : ஆக 04, 2024 12:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆலந்துார், கேரள மாநிலம், வயநாடு நிலச்சரிவில் 350க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினர் நிதி வழங்கி வருகின்றனர்.
பரங்கிமலை, ஏழு கிணறு பகுதியைச் சேர்ந்தவர் மாநகர பேருந்து ஓட்டுனர் மகன் கார்த்திக், 10 என்ற சிறுவன், தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 2,000 ரூபாயை, கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.