/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மொபைல் போன் பறித்த சிறுவன் சிக்கினான்
/
மொபைல் போன் பறித்த சிறுவன் சிக்கினான்
ADDED : மே 28, 2024 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரவாயல், கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முருகவேல், 45. இவர் நேற்று முன் தினம் இரவு சொந்த ஊர் செல்வதற்காக, மதுரவாயல் பேருந்து நிறுத்தத்தில், வெளியூர் செல்லும் பேருந்துக்கு காத்திருந்தார்.
அப்போது அங்கு வந்த 17வயது சிறுவன், முருகவேலுவுவிடம் பேச்சு கொடுத்து அவரது கவனத்தை திசை திருப்பி மொபைல் போனை திருடினார்.
அதைபோன்று அங்கு நின்றிருந்தஆவடியை சேர்ந்த அண்ணாமலை, 40, என்பவரிடமும் மொபைல் போன் திருடப்பட்டது.
இதையறிந்த அண்ணாமலை சிறுவனை விரட்டிப்பிடித்து, மதுரவாயல் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அச்சிறுவன், மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் என தெரிந்தது.