ADDED : மே 11, 2024 12:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எம்.கே.பி.நகர், வியாசர்பாடி, சஞ்சய் நகரில் மதுபோதையில் மூவர் கும்பல் அப்பகுதிமக்களிடம், வீண் தகராறு செய்வதாக எம்.கே.பி.நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, போதையில் தகராறில் ஈடுபட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வியாசர்பாடி, பி.வி.காலனியைச் சேர்ந்த ஆகாஷ், 19, வியாசர்பாடியைச் சேர்ந்த ஈசாக், 19, லோகேஷ்குமார், 24, ஆகியோரை நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.