ADDED : ஆக 01, 2024 12:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காசிமேடு, எர்ணாவூர், 74வது பிளாக்கை சேர்ந்தவர் சிலம்பரசன், 31; மீனவர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக, நொச்சிகுப்பத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில், மீன்பிடி தொழில் செய்து வந்தார்.
நேற்று காலை, மீனவர்கள் குமார், ராஜ்குமார், சுப்பிரமணி, வேலு, சின்னையா ஆகியோருடன், காசிமேடு கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளார்.
அப்போது, படகின் பின்புறம் சென்று சிறுநீர் கழிக்கும் போது, சிலம்பரசன் திடீரென கடலில் விழுந்துள்ளார்.
காணாமல் போன அவரை, படகில் இருந்தவர்கள் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இந்நிலையில், 10க்கும் மேற்பட்ட படகுகளில் சென்ற சக மீனவர்கள், அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.