sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கடலில் விழுந்த மீனவர் மாயம்

/

கடலில் விழுந்த மீனவர் மாயம்

கடலில் விழுந்த மீனவர் மாயம்

கடலில் விழுந்த மீனவர் மாயம்


ADDED : ஆக 01, 2024 12:43 AM

Google News

ADDED : ஆக 01, 2024 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காசிமேடு, எர்ணாவூர், 74வது பிளாக்கை சேர்ந்தவர் சிலம்பரசன், 31; மீனவர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக, நொச்சிகுப்பத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில், மீன்பிடி தொழில் செய்து வந்தார்.

நேற்று காலை, மீனவர்கள் குமார், ராஜ்குமார், சுப்பிரமணி, வேலு, சின்னையா ஆகியோருடன், காசிமேடு கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளார்.

அப்போது, படகின் பின்புறம் சென்று சிறுநீர் கழிக்கும் போது, சிலம்பரசன் திடீரென கடலில் விழுந்துள்ளார்.

காணாமல் போன அவரை, படகில் இருந்தவர்கள் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இந்நிலையில், 10க்கும் மேற்பட்ட படகுகளில் சென்ற சக மீனவர்கள், அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us