/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெக்கானிக்கின் திருமணத்தை நிறுத்திய காதலி
/
மெக்கானிக்கின் திருமணத்தை நிறுத்திய காதலி
ADDED : மார் 11, 2025 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொன்னேரி,
பெரியபாளையம், தும்பாக்கத்தைச் சேர்ந்தவர் லோகேஸ்வரன், 33; மெக்கானிக். இவர், பொன்னேரி அருகே இளம்பெண் ஒருவரிடம் ஹிந்தி கற்க சென்றார். இருவருக்கும் இடையேயான பழக்கம், காதலாக மாறியது. இந்நிலையில், லோகேஸ்வரனுக்கு அவரது பெற்றோர் வேறு பெண்ணுடன் திருமணம் ஏற்பாடு செய்திருந்தனர்.
நேற்று முன்தினம் பெரியபாளையம் தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற இருப்பது, காதலிக்கு தெரியவர பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரித்த போலீசார், லோகேஸ்வரனை கைது செய்தனர். இதனால், திருமணமும் நின்று போனது.