ADDED : மே 25, 2024 06:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு : புளியந்தோப்பு, டிமலஸ் சாலையைச் சேர்ந்த 27 வயது இளம் பெண்ணும், வியாசர்பாடியைச் சேர்ந்த திலீப் குமார், 30, என்பவரும், ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்தனர். கடந்த சில ஆண்டுகளாக இருவரும் காதலித்தும் வந்தனர்.
இந்த நிலையில், ஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணை, திலீப்குமார் தனியார் ஓட்டலுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.
திருமணம் செய்து கொள்வதாக கூறிய இவர், தற்போது திருமணத்திற்கு சம்மதிக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்த புகாரை தொடர்ந்து, திலீப்குமாரிடம் புளிந்தோப்பு மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.