sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

விலகி வசித்த மனைவியிடம் வம்பு செய்தவர் கைது 

/

விலகி வசித்த மனைவியிடம் வம்பு செய்தவர் கைது 

விலகி வசித்த மனைவியிடம் வம்பு செய்தவர் கைது 

விலகி வசித்த மனைவியிடம் வம்பு செய்தவர் கைது 


ADDED : ஜூன் 27, 2024 12:35 AM

Google News

ADDED : ஜூன் 27, 2024 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பூர், பெரம்பூர், சங்கரமடம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சங்கவி, 26. இவரது கணவர், பெரம்பூர் நீலந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார்,33. ஆட்டோ ஓட்டுனராக உள்ளார்.

இவர்களுக்கு 10 ஆண்டுக்கு முன் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

இரண்டு பெண் குழந்தைகளுடன் சங்கவி தனியாக வசிக்கிறார். விஜயகுமார், வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 22ம் தேதி, இரவு 7:00 மணியளவில், மதுரைசாமி மடம் தெரு வழியே சங்கவி நடந்து வந்து கொண்டிருந்த போது, மது போதையில் ஆட்டோ ஓட்டி வந்த விஜயகுமார், சங்கவியை வழிமறித்து தகராறு செய்து, தாக்கியுள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த சங்கவி, துாக்க மாத்திரைகளை விழுங்கியுள்ளார். பின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சங்கவி, மாஜி கணவர் விஜயகுமார் மீது திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விஜயகுமாரை கைது செய்து, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us