ADDED : மே 06, 2024 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திரு.வி.க.நகர்:திரு.வி.க.நகர் வெற்றி நகரைச் சேர்ந்தவர் வினோத்தின் மனைவி பூங்கொடி, 38. வினோத்திற்கு கடந்த 4ம் தேதி சதீஷ்குமார், 45, என்பவரிடம் தகராறு ஏற்பட்டு பீர் பாட்டிலால் தாக்கியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார், வினோத் வீட்டிற்கு சென்று தகாத வார்த்தையால் பேசி, பூங்கொடியின் கையை பிடித்து இழுத்து அநாகரிகமாக நடந்துள்ளார். மேலும், அவரது கழுத்தை நெரித்து கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
இது குறித்து விசாரித்த திரு.வி.க.நகர் போலீசார், காந்தி நகரைச் சேர்ந்த சதீஷ்குமாரை நேற்று கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே மூன்று வழக்குகள் உள்ளன.