sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மனைவியை பயமுறுத்த துாக்கிட்டவர் உயிரிழப்பு

/

மனைவியை பயமுறுத்த துாக்கிட்டவர் உயிரிழப்பு

மனைவியை பயமுறுத்த துாக்கிட்டவர் உயிரிழப்பு

மனைவியை பயமுறுத்த துாக்கிட்டவர் உயிரிழப்பு


ADDED : மே 13, 2024 12:59 AM

Google News

ADDED : மே 13, 2024 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி:ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், தென்றல் நகர் கிழக்கு ஐந்தாவது தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன், 38. இவர், அம்பத்துார் எஸ்டேட்டில் சொந்தமாக மெட்டல் பாலிஷிங் தொழில் செய்து வருகிறார்.

இவரது மனைவி வள்ளி, 31, வீட்டில் தையல் வேலை செய்கிறார். தம்பதிக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.

மது போதைக்கு அடிமையான பாண்டியன், கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மது அருந்தியபடி, வீட்டில் இருந்துள்ளார்.

நேற்று முன்தினம் வழக்கம்போல், மது அருந்தி வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

பின், வழக்கம் போல், படுக்கை அறைக்கு சென்று துாக்கிட்டு தற்கொலை செய்து கொள்வது போல் நடித்துள்ளார்.

ஆனால், சிறிது நேரத்தில் துாக்கில் தொங்கிய நிலையில் பாண்டியன் இறந்து கிடந்துள்ளார்.

திருமுல்லைவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us