sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வீட்டு வாசலில் ரகளை செய்த ரவுடியை தீர்த்துக்கட்டிய கும்பல்

/

வீட்டு வாசலில் ரகளை செய்த ரவுடியை தீர்த்துக்கட்டிய கும்பல்

வீட்டு வாசலில் ரகளை செய்த ரவுடியை தீர்த்துக்கட்டிய கும்பல்

வீட்டு வாசலில் ரகளை செய்த ரவுடியை தீர்த்துக்கட்டிய கும்பல்


ADDED : ஜூன் 19, 2024 12:26 AM

Google News

ADDED : ஜூன் 19, 2024 12:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, திருவேற்காடு, கோலடி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன், 24; ரவுடி. இவர், நேற்று முன்தினம் இரவு, திருமுல்லைவாயில், புதிய அண்ணா நகரில், உடல்நிலை பாதிக்கப்பட்ட நண்பனின் தாயை பார்க்க, நண்பர்களான கார்த்திகேயன், வினோத் ஆகியோருடன் சென்றார்.

அங்கு, சதாசிவம், 31, என்பவரின் வீட்டு வாசலில் நின்று, கணேசன் நண்பர்களுடன் சத்தமாக பேசி, ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதை, சதாசிவம் கண்டித்துள்ளார்.

உடனே மூவரும், சதாசிவத்தை கத்தியைக் காட்டி மிரட்டி, அங்கிருந்து பைக்கில் சென்றனர். ஆத்திரமடைந்த சதாசிவம், அதே பகுதியைச் சேர்ந்த உறவினர்களான, செல்வம், 40, வேலு, 36, பாலகிருஷ்ணன், 65, பீட்டர், 44, மற்றும் அன்பழகன், 37, ஆகியோருடன், இருசக்கர வாகனத்தில், கணேசனை பின் தொடர்ந்து மடக்கிப் பிடித்தனர்.

தொடர்ந்து, இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில், கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து விசாரித்த திருமுல்லைவாயில் போலீசார், சதாசிவம், செல்வம், வேலு, பாலகிருஷ்ணன், கணேசனின் நண்பர் கார்த்திகேயன் உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்; வினோத்தை தேடி வருகின்றனர். காயமடைந்த பீட்டர் மற்றும் அன்பழகன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us