ADDED : ஜூலை 05, 2024 12:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பூர், திரு.வி.க.நகர் கென்னடி சதுக்கத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 30. பழைய இரும்புக் கடையில் வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, அகரம் பகுதியைச் சேர்ந்த ரவுடி கதிரவன்,30 என்பவர், மணிகண்டனிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அப்போது ரோந்துப்பணியில் இருந்த செம்பியம் போலீசார் அங்கு வந்தனர். மிரட்டலில் ஈடுபட்ட கதிரவனை அங்கேயே கைது செய்தனர்.