sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பயணியர் புகார் எதிரொலி எம்.டி.சி., அதிகாரிகள் மீது பாய்ந்தது நடவடிக்கை

/

பயணியர் புகார் எதிரொலி எம்.டி.சி., அதிகாரிகள் மீது பாய்ந்தது நடவடிக்கை

பயணியர் புகார் எதிரொலி எம்.டி.சி., அதிகாரிகள் மீது பாய்ந்தது நடவடிக்கை

பயணியர் புகார் எதிரொலி எம்.டி.சி., அதிகாரிகள் மீது பாய்ந்தது நடவடிக்கை


ADDED : ஜூன் 09, 2024 01:14 AM

Google News

ADDED : ஜூன் 09, 2024 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:பயணியர் புகார் மற்றும் நிர்வாக காரணங்களால் மாநகர போக்குவரத்து கழகத்தில் ஆறு கிளை மேலாளர்கள் உட்பட 10 அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

எம்.டி.சி., எனப்படும் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் இயக்கப்படும், 3,200க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகளில், தினமும் 32 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர்.

மத்திய பணிமனை, தி.நகர், அடையார், தாம்பரம், வியாசர்பாடி, வடபழநி, அம்பத்துார் உட்பட 32 பணிமனைகளில் இருந்து, மாநகர பேருந்துகள் பராமரித்து, இயக்கப்படுகின்றன. தேவைக்கு ஏற்ப, சரியான நேரத்தில் பேருந்துகள் இயக்குவது, பராமரிப்பு, பணியாளர்களுடன் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் முக்கிய பொறுப்பு, கிளை மேலாளர்களுக்கு இருக்கிறது.

இது குறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

பயணியருக்கு போதிய அளவில் பேருந்துகளை இயக்குவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

சில பணிமனைகளில் கிளை மேலாளர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். சில அதிகாரிகள் விருப்ப ஓய்வு பெற்று சென்றனர்.

எனவே, பயணியருக்கு தடையின்றி பேருந்து வசதி அளிக்க, நிர்வாக ரீதியாக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பயணியர் புகாரின் அடிப்படையில் சில பணிமனை மேலாளர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, ஆதம்பாக்கம், கண்ணகிநகர், ஆவடி, அய்யப்பன்தாங்கல், பெரும்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பணிமனைகளில், மேலாளர்கள் உட்பட 10 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதுபோல், பணிமனைகளில் ஏற்படும் ஓட்டுனர், நடத்துனர் காலி பணியிடங்களை நிரப்ப தற்காலிக பணியாளர்களை நியமித்து, தடையின்றி மாநகர பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us