sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

படுமோசமான ரயில்வே சர்வீஸ் சாலை விடிவு பிறக்காமல் பகுதிவாசிகள் அவதி

/

படுமோசமான ரயில்வே சர்வீஸ் சாலை விடிவு பிறக்காமல் பகுதிவாசிகள் அவதி

படுமோசமான ரயில்வே சர்வீஸ் சாலை விடிவு பிறக்காமல் பகுதிவாசிகள் அவதி

படுமோசமான ரயில்வே சர்வீஸ் சாலை விடிவு பிறக்காமல் பகுதிவாசிகள் அவதி


ADDED : செப் 04, 2024 01:38 AM

Google News

ADDED : செப் 04, 2024 01:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லிவாக்கம்:இரண்டு ஆண்டுகளாக அரைகுறையாக விடப்பட்டு, படுமோசமாக காட்சியளிக்கும் சர்வீஸ் சாலையை, விரைந்து சீரமைக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.

அண்ணா நகர் மண்டலம், வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகில், ரயில்வே சர்வீஸ் சாலை உள்ளது. ரயில்வேக்கு சொந்தமான இந்த சாலையின் ஒரு பகுதியில், வில்லிவாக்கம் சந்தை செயல்படுகிறது.

இந்த சாலையை கடந்து, வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், பல்வேறு இடங்களுக்குச் சென்று வருகின்றனர். அதேபோல், சந்தைக்கு தினமும் நுாற்றுக்கணக்கான மக்கள் செல்கின்றனர்.

இந்த சாலையை குறைந்தபட்ச பராமரிப்பு கூட செய்யாமல், ரயில்வே நிர்வாகம் அலட்சியமாக செயல்படுகிறது. குண்டும் குழியுமான இச்சாலையை சீரமைக்காமல், ஆக்கிரமிப்புகளை காரணம் காட்டி ரயில்வே நிர்வாகம் தட்டிக் கழித்து வந்தது.

இந்த சாலை குறித்து நம் நாளிதழில் பலமுறை சுட்டிக் காட்டிய பின், 2022 ஆக., 5ம் தேதி, ரயில்வே சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

அதன் பின், புதிய சாலை அமைக்கும் பணிகளை, ரயில்வே துவங்கியது. அங்கு ஒரு பகுதியில் மட்டும் சிமென்ட் சாலை அமைக்கப்பட்ட நிலையில், சாலை அரைகுறையாக விடப்பட்டது.

அதன் பின், பல முறை மாநகராட்சி மற்றும் ரயில்வே துறைகளிடம் பகுதி மக்கள் முறையிட்டும், எந்த பலனும் இல்லை.

இந்நிலையில் கடந்த மாதம், 95வது வார்டு கவுன்சிலர் மற்றும் வில்லிவாக்கம் சந்தை வியாபாரிகள் ஒரு சிலர் சேர்ந்து, குறிப்பிட்ட இடங்களில் உள்ள பள்ளங்களில் மணல் கொட்டினர்.

ஆனாலும், சாலையில் சிதறிக் கிடக்கும் கல் மற்றும் பள்ளங்களால், அவ்வழியாகச் செல்வோர் தடுக்கி கீழே விழுகின்றனர். எனவே, இந்த சாலையை முறையாக சீரமைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்து உள்ளது.

மாறி மாறி கைகாட்டும் அதிகாரிகள்


'தினமலர்' நாளிதழில் பலமுறை சுட்டிக்காட்டிய பின், பல கோடி ரூபாய் செலவில் குறிப்பிட்ட துாரம் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. அவை பாதியிலேயே விடப்பட்டதால், தற்போது சாலை முழுதும் ஜல்லி பெயர்ந்து, ஆபத்தான நிலையில் உள்ளது. கண்துடைப்பிற்கு அதிகாரிகள் அவ்வப்போது, ஆய்வு செய்துவிட்டுச் செல்கின்றனர்.இதற்கிடையில், லேசான மழை பெய்தாலே, சாலை முழுதும் குளம்போல் காட்சியளிக்கிறது. ரயில்வே மற்றும் மாநகராட்சி துறைகளும் மாறி மாறி கை காட்டி வருகின்றன. இரு துறைகளும் இணைந்து, இங்கு புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சமூக ஆர்வலர்கள்



இம்மாத இறுதிக்குள் புதிய சாலை


இம்மாத இறுதிக்குள் புது சாலை ரயில்வே சாலையை சீரமைக்கும் பணிக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதற்கான அறிக்கையும் தயார் செய்யப்பட்டு உள்ளது. ஒரு சில நாட்களில் பணிகள் துவங்கி, இம்மாதம் இறுதிக்குள் புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.- ரயில்வே அதிகாரிகள்.








      Dinamalar
      Follow us