/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
படுமோசமான ரயில்வே சர்வீஸ் சாலை விடிவு பிறக்காமல் பகுதிவாசிகள் அவதி
/
படுமோசமான ரயில்வே சர்வீஸ் சாலை விடிவு பிறக்காமல் பகுதிவாசிகள் அவதி
படுமோசமான ரயில்வே சர்வீஸ் சாலை விடிவு பிறக்காமல் பகுதிவாசிகள் அவதி
படுமோசமான ரயில்வே சர்வீஸ் சாலை விடிவு பிறக்காமல் பகுதிவாசிகள் அவதி
ADDED : செப் 04, 2024 02:03 AM

வில்லிவாக்கம்:இரண்டு ஆண்டுகளாக அரைகுறையாக விடப்பட்டு, படுமோசமாக காட்சியளிக்கும் சர்வீஸ் சாலையை, விரைந்து சீரமைக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.
அண்ணா நகர் மண்டலம், வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகில், ரயில்வே சர்வீஸ் சாலை உள்ளது. ரயில்வேக்கு சொந்தமான இந்த சாலையின் ஒரு பகுதியில், வில்லிவாக்கம் சந்தை செயல்படுகிறது.
இந்த சாலையை கடந்து, வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், பல்வேறு இடங்களுக்குச் சென்று வருகின்றனர். அதேபோல், சந்தைக்கு தினமும் நுாற்றுக்கணக்கான மக்கள் செல்கின்றனர்.
இந்த சாலையை குறைந்தபட்ச பராமரிப்பு கூட செய்யாமல், ரயில்வே நிர்வாகம் அலட்சியமாக செயல்படுகிறது. குண்டும் குழியுமான இச்சாலையை சீரமைக்காமல், ஆக்கிரமிப்புகளை காரணம் காட்டி ரயில்வே நிர்வாகம் தட்டிக் கழித்து வந்தது.
இந்த சாலை குறித்து நம் நாளிதழில் பலமுறை சுட்டிக் காட்டிய பின், 2022 ஆக., 5ம் தேதி, ரயில்வே சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
அதன்பின், புதிய சாலை அமைக்கும் பணிகளை, ரயில்வே துவங்கியது. அங்கு ஒரு பகுதியில் மட்டும் சிமென்ட் சாலை அமைக்கப்பட்ட நிலையில், சாலை அரைகுறையாக விடப்பட்டது.
அதன்பின், பல முறை மாநகராட்சி மற்றும் ரயில்வே துறைகளிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டும், எந்த பலனும் இல்லை.
இந்நிலையில் கடந்த மாதம், 95வது வார்டு கவுன்சிலர் மற்றும் வில்லிவாக்கம் சந்தை வியாபாரிகள் ஒரு சிலர் சேர்ந்து, குறிப்பிட்ட இடங்களில் உள்ள பள்ளங்களில் மணல் கொட்டினர்.
ஆனாலும், சாலையில் சிதறிக் கிடக்கும் கல் மற்றும் பள்ளங்களால், அவ்வழியாகச் செல்வோர் தடுக்கி கீழே விழுகின்றனர். எனவே, இந்த சாலையை முறையாக சீரமைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
இம்மாத இறுதிக்குள் புது சாலை
ரயில்வே சாலையை சீரமைக்கும் பணிக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதற்கான அறிக்கையும் தயார் செய்யப்பட்டு உள்ளது. ஒரு சில நாட்களில் பணிகள் துவங்கி, இம்மாதம் இறுதிக்குள் புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- ரயில்வே அதிகாரிகள்.