sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஏரி நீர்மட்டம் அளவிடும் கருவிக்கான அறை தயார்

/

ஏரி நீர்மட்டம் அளவிடும் கருவிக்கான அறை தயார்

ஏரி நீர்மட்டம் அளவிடும் கருவிக்கான அறை தயார்

ஏரி நீர்மட்டம் அளவிடும் கருவிக்கான அறை தயார்


ADDED : மே 16, 2024 12:51 AM

Google News

ADDED : மே 16, 2024 12:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிட்லபாக்கம், தாம்பரம் மாநகராட்சி, சிட்லபாக்கத்தில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான, 102 ஏக்கர் பரப்புடைய ஏரி உள்ளது. ஆக்கிரமிப்புகளால் ஏரியின் அளவு பாதியாக சுருங்கிவிட்டது. சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கழிவுநீர் கலந்து, ஏரி நீர் மாசடைவதோடு, நிலத்தடி நீர் நாசமானது.

இப்பிரச்னைக்கு தீர்வாக, ஏரியை துார்வாரி, சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, சுற்றுச்சூழல் துறை சார்பில், 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, ஏரி சீரமைப்பு பணி, 2019ல் துவங்கியது.

ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிக்கப்பட்டன. ஏரியில் இருந்த கழிவுகள் வெளியேற்றப்பட்டு, துார்வாரி, ஆழப்படுத்தப்படுத்தப்பட்டது. கான்கிரீட் கற்களால் கரை பலப்படுத்தப்பட்டு, நடைபாதை அமைக்கப்பட்டது.

தற்போது, மழைக்காலத்தில் ஏரி நிரம்பினால், நீர்மட்டத்தை அளவிடும் கருவி வைப்பதற்கான அறை மற்றும் கழிவுநீர் சேகரிப்பு தொட்டி கட்டும் பணி நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us