/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஐ.டி., ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு
/
ஐ.டி., ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு
ADDED : மே 04, 2024 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடுங்கையூர்,
கொடுங்கையூர், முத்தமிழ் நகர் 6வது பிளாக்கைrf சேர்ந்தவர் தீபக், 31. இவர் அடையாறில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு குடும்பத்தினருடன், தீபக் வீட்டில் துாங்கினார். பின்னர் காலையில் எழுந்து பார்த்தபோது, வீட்டின் மேஜையில் வைத்திருந்த 1 லட்ச ரூபாய் மதிப்பிலான வைர மோதிரம், 1 சவரன் தங்க மோதிரம், 10,000 ரூபாய் மற்றும் மொபைல் போனை, மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இது குறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.