sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அரசு மருத்துவமனை கட்ட கூடுதல் நிதி ஒதுக்க முடிவு

/

அரசு மருத்துவமனை கட்ட கூடுதல் நிதி ஒதுக்க முடிவு

அரசு மருத்துவமனை கட்ட கூடுதல் நிதி ஒதுக்க முடிவு

அரசு மருத்துவமனை கட்ட கூடுதல் நிதி ஒதுக்க முடிவு


ADDED : ஏப் 25, 2024 12:13 AM

Google News

ADDED : ஏப் 25, 2024 12:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, பெரும்பாக்கம் கல்லுாரி சாலையில், 2.16 லட்சம் சதுர அடி பரப்பு கொண்ட இடம், அரசு மருத்துவமனை கட்ட ஒதுக்கப்பட்டது. இதில், 1 லட்சம் சதுர அடி பரப்பில், 51 கோடி ரூபாயில், 6 மாடியில், 262 படுக்கை வசதியுடன் மருத்துவமனை கட்டப்படுகிறது.

ஒவ்வொரு மாடியும், 16,714 சதுர அடி பரப்பில் அமைகிறது. அறுவை சிகிச்சை, அவசர பிரிவு, பொது பிரிவு, டயாலிசிஸ் உள்ளிட்ட பிரிவுகளில், 262 படுக்கை வசதிகள் அமைய உள்ளன.

ரத்த பரிசோதனை, எக்ஸ்-ரே, ஸ்கேன், மருந்து சேமிப்பு அறை, அலுவலகம், ஆவண காப்பகம் உள்ளிட்ட வசதிகளுடன் அமைகிறது. தற்போது, 75 சதவீதம் பணி முடிந்துள்ளது.

பருவமழையில் அதிக வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதியானதால், 3 அடி உயரத்தில் தரைமட்டம் உயர்த்தப்படுகிறது. மேலும், 7 அடி உயரத்தில் சுற்றுச்சுவர், தெருவிளக்கு, உள்பகுதியில் சாலை அமைக்கப்பட உள்ளது.

இதற்கு, 22 கோடி ரூபாய் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிதி, ஜூன் மாதம் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நான்கு மாதங்களில் அனைத்து பணிகளையும் முடிக்கும் வகையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us