sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மின் வாரியம் தோண்டிய பள்ளம் தடுப்புகள் இல்லாததால் அச்சம்

/

மின் வாரியம் தோண்டிய பள்ளம் தடுப்புகள் இல்லாததால் அச்சம்

மின் வாரியம் தோண்டிய பள்ளம் தடுப்புகள் இல்லாததால் அச்சம்

மின் வாரியம் தோண்டிய பள்ளம் தடுப்புகள் இல்லாததால் அச்சம்


ADDED : செப் 02, 2024 02:22 AM

Google News

ADDED : செப் 02, 2024 02:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போரூர்:போரூரில், மின் கேபிள் பதிக்கும் பணிக்காக இரு மாதங்களுக்கு முன் பள்ளங்கள் தோண்டப்பட்ட நிலையில், இன்னும் பணிகள் நிறைவு பெறாததால், பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

போரூர், வயர்லஸ் ஸ்டேஷன் சாலையிலுள்ள துணை மின் நிலையத்தில் இருந்து, வளசரவாக்கம் எஸ்.ஆர்.எஸ்., கார்டன் அருகே உள்ள துணை மின் நிலையத்திற்கு, 3 கி.மீ., துாரம், மின் கேபிள் புதைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக போரூர், 153வது வார்டுக்கு உட்பட்ட பெருமாள் கோவில் தெரு, வன்னியர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன.

இப்பகுதிகளில் பள்ளங்கள் தோண்டி இரு மாதங்களாகியும், இன்னும் பணிகள் முடியாததால், கடும் நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக, பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

அத்துடன், பள்ளங்களை சுற்றி முறையாக தடுப்புகள் அமைக்கப்படவில்லை. இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மின் வாரிய பணிகளை விரைந்து முடித்து, பள்ளங்களை சீரமைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

போரூர் பெருமாள் கோவில் தெரு, வன்னியர் தெரு உள்ளிட்டவை குறுகலான தெருக்களாக உள்ளன. அத்துடன் குடிநீர், கழிவுநீர் குழாய், வீட்டு இணைப்பிற்கான, 11 கே.வி., மின்வாரிய கேபிள் ஆகியவை செல்கின்றன.

இதனால், கேபிள் பதிக்கும் பணி மெதுவாக நடந்து வருகிறது. மின்வாரியம் சார்பில் தோண்டப்பட்ட பள்ளங்களில், முறையாக தடுப்புகள் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us