ADDED : ஜூலை 24, 2024 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, திருவள்ளூரில் இருந்து சென்டரல் நோக்கி வந்த மின்சார ரயில், திருநின்றவூர் ரயில் நிலையம் அருகே சிக்னல் கோளாறு காரணமாக நேற்று மாலை 5:20 மணி அளவில் நிறுத்தப்பட்டது. இதனால், சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர் தடத்தில் 30 நிமிடங்கள் வரை, ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
சென்ட்ரல் நோக்கி வந்த மின்சார ரயில்கள், ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சீரமைப்புக்கு பின் வழக்கம்போல இயக்கப்பட்டன.