sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அம்மா உணவகத்தில் சாப்பிட்டவர்கள் தி.மு.க., - எம்.எல்.ஏ.,விடம் புகார்

/

அம்மா உணவகத்தில் சாப்பிட்டவர்கள் தி.மு.க., - எம்.எல்.ஏ.,விடம் புகார்

அம்மா உணவகத்தில் சாப்பிட்டவர்கள் தி.மு.க., - எம்.எல்.ஏ.,விடம் புகார்

அம்மா உணவகத்தில் சாப்பிட்டவர்கள் தி.மு.க., - எம்.எல்.ஏ.,விடம் புகார்


ADDED : ஜூலை 24, 2024 12:34 AM

Google News

ADDED : ஜூலை 24, 2024 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குரோம்பேட்டை, பல்லாவரம், கீழ்க்கட்டளை, பம்மல், அனகாபுத்துார் பகுதிகளில் இயங்கி வரும் அம்மா உணவகங்களில், பல்லாவரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதி, நேற்று ஆய்வு செய்தார்.

பம்மலில் இயங்கி வரும் உணவகத்தில் சாப்பிட்டவர்கள், 'காலையில் பொங்கல் போடுவதில்லை. அரிசி தரமானதாக இல்லை. சாம்பார் சரியில்லை. இட்லி கல் போன்று உள்ளது' என்று சரமாரியாக புகார் தெரிவித்தனர்.

அதேபோல், அனகாபுத்துாரில், 'போதிய பாத்திரங்கள் இல்லை. மழை பெய்தால் மழைநீர் ஒழுகிறது. ஆர்.ஓ., வாட்டர் பழுதாகி விட்டது, கழிப்பறை வசதியில்லை, பொங்கல் மற்றும் சாம்பார் சரியில்லை' என, புகார்கள் தெரிவிக்கப்பட்டன.

இதையடுத்து, இந்த இரண்டு உணவகங்களிலும் எழுந்துள்ள புகார்களை சரிசெய்து, மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தருக்கு, எம்.எல்.ஏ., கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

அனகாபுத்துார் அம்மா உணவகத்தை மேம்படுத்த, கடந்தாண்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டும் இதுவரை பணிகள் நடக்கவில்லை என்று குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us