sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கஞ்சா போதையில் மாணவன் விசாரணைக்கு பின் மூவர் கைது

/

கஞ்சா போதையில் மாணவன் விசாரணைக்கு பின் மூவர் கைது

கஞ்சா போதையில் மாணவன் விசாரணைக்கு பின் மூவர் கைது

கஞ்சா போதையில் மாணவன் விசாரணைக்கு பின் மூவர் கைது


ADDED : ஆக 08, 2024 12:33 AM

Google News

ADDED : ஆக 08, 2024 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழவந்தாங்கல், பழவந்தாங்கல் அரசுப் பள்ளியில், நேற்று முன்தினம் பிளஸ் 2 மாணவர், மயக்க நிலையிலே இருந்துள்ளார்; உளறி உளறி பேசியுள்ளார்.

இது குறித்து அறிந்த தலைமை ஆசிரியர், மாணவரை சோதனையிட்டதில், 50 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது. விசாரணையில், பழவந்தாங்கல் ரயில் நிலையம் பகுதியில், கஞ்சா பொட்டலத்தை வாங்கியதாக, மாணவர் கூறினார்.

தொடர்ந்து, மாணவருக்கு அறிவுரை வழங்கிய ஆசிரியர்கள், பெற்றோரை வரவழைத்து அனுப்பினர். பின், பழவந்தாங்கல் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, பழவந்தாங்கல் கல்லுாரி சாலை அருகே, போலீசார் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களை பார்த்ததும், தப்பியோட முயன்ற மூவரை, போலீசார் பிடித்தனர். அவர்களிடம் 1.1 கிலோ அளவில் ஏராளமான கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.

பழவந்தாங்கலை சேர்ந்த தில்ஷன், 24, மடிப்பாக்கத்தைச் சேர்ந்த வைஷாக், 23, லோகபிரவீன், 24, ஆகியோர், பள்ளி, கல்லுாரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பது தெரியவந்தது. மூவரையும், பழவந்தாங்கல் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us