/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லஞ்சம் வாங்கிய மின் பொறியாளர் உட்பட மூவர் கைது
/
லஞ்சம் வாங்கிய மின் பொறியாளர் உட்பட மூவர் கைது
ADDED : மே 29, 2024 12:39 AM

திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அடுத்த வெடியங்காடு புதுார்மேடு துணை மின் நிலையத்தில் சுரேஷ், 37, என்பவர்இ உதவி மின் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
விடியங்காடு கிராமத்தைச் சேர்ந்த பாபு, 40, என்பவர், விசைத்தறி கூடத்திற்கு கூடுதல் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளார். இதற்கு சுரேஷ், 6,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.
போலீசாரின் அறிவுறுத்தல்படி, நேற்று மின்வாரிய அலுவலகம் சென்ற பாபு, சுரேஷிடம் பணத்தை வழங்கினார். சுரேஷ், மின் கம்பியாளர்கள் நித்தியானந்தம் மற்றும் சண்முகத்திடம் அளிக்கும்படி கூறியுள்ளார்.
அவர்களிடம் பாபு 6,000 ரூபாய் வழங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் தமிழரசி மற்றும் போலீசார் அவர்களை பிடித்தனர். தொடர்ந்து, மூவரையும் கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.