/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருப்பதி ரயில் சேவை 31ம் தேதி வரை மாற்றம்
/
திருப்பதி ரயில் சேவை 31ம் தேதி வரை மாற்றம்
ADDED : மே 15, 2024 11:49 PM
சென்னை:திருப்பதி ரயில் பணிமனையில் மேம்பாட்டு பணி நடப்பதால், சென்னை சென்ட்ரல் - திருப்பதி செல்லும் ரயில்கள், வரும் 31ம் தேதி வரை ரேணிகுண்டா வரை மட்டுமே இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு:
★ சென்னை சென்ட்ரல் - திருப்பதி காலை 6:25 மணி சப்தகிரி விரைவு ரயில், வரும் 31ம் தேதி வரை ரேணிகுண்டா வரை மட்டுமே இயக்கப்படும்
★ திருப்பதி - சென்ட்ரல் மாலை 6:05 மணி சப்தகிரி விரைவு ரயில், 31ம் தேதி வரை ரேணிகுண்டாவில் இருந்து இயக்கப்படும்
★ சென்ட்ரல் - திருப்பதி மதியம் 2:25 மணி விரைவு ரயில், 31ம் தேதி வரை ரேணிகுண்டா வரை மட்டுமே ஓடும்
★ திருப்பதி - சென்ட்ரல் காலை 10:10 மணி விரைவு ரயில், 31ம் தேதி வரை ரேணிகுண்டாவில் இருந்து இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.