sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

குட்கா விற்றால் இனி ரூ.1 லட்சம் திருவள்ளூர் கலெக்டர் எச்சரிக்கை

/

குட்கா விற்றால் இனி ரூ.1 லட்சம் திருவள்ளூர் கலெக்டர் எச்சரிக்கை

குட்கா விற்றால் இனி ரூ.1 லட்சம் திருவள்ளூர் கலெக்டர் எச்சரிக்கை

குட்கா விற்றால் இனி ரூ.1 லட்சம் திருவள்ளூர் கலெக்டர் எச்சரிக்கை


ADDED : மே 29, 2024 12:28 AM

Google News

ADDED : மே 29, 2024 12:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், உணவு பாதுகாப்பு துறை சார்பில், புகையிலை மற்றும் பான் மசாலா தடுத்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாச பெருமாள் முன்னிலை வகித்தார். கலெக்டர் பிரபுசங்கர் பேசியதாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில் குட்கா மற்றும் பான் மசாலாவை விற்பனை செய்வதை முற்றிலும் தடை செய்ய வேண்டும். அவ்வப்போது சில்லரை மற்றும் மொத்த விற்பனை செய்யும் கடைகளை கண்காணிக்க வேண்டும்.

உணவு பாதுகாப்பு மற்றும் காவல் துறையினர் ஆய்வில், குட்கா மற்றும் பான் மசாலா விற்பனை கண்டறியப்பட்டால், 25,000 ரூபாய் அபராதம் விதிப்பதுடன், 15 நாட்கள் கடைகளை மூட வேண்டும்.

இரண்டாவது முறை, 50,000 ரூபாய் அபராதம், 30 நாட்கள் கடை மூடல், 3வது முறை பிடிபட்டால், 90 நாட்கள் கடை மூடுவதுடன், 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும்.

அண்டை மாநிலங்களில் இருந்து குட்கா மற்றும் பான் மசாலா வருவதை தீவிரமாக கண்காணித்து, முற்றிலும் தடுக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

கூட்டத்தில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திர போஸ், முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us