sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மழைநீர் வடிகால் பள்ளத்தால் போக்குவரத்து கடும் பாதிப்பு

/

மழைநீர் வடிகால் பள்ளத்தால் போக்குவரத்து கடும் பாதிப்பு

மழைநீர் வடிகால் பள்ளத்தால் போக்குவரத்து கடும் பாதிப்பு

மழைநீர் வடிகால் பள்ளத்தால் போக்குவரத்து கடும் பாதிப்பு


ADDED : ஜூன் 03, 2024 02:13 AM

Google News

ADDED : ஜூன் 03, 2024 02:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மடிப்பாக்கம்,:பெருங்குடி மண்டலம்,மடிப்பாக்கத்தில் அம்பேத்கர் சாலை உள்ளது. பேருந்து நிலையத்தில் இருந்து பெரியார் நகர், குபேரன் நகர், ராஜலட்சுமி நகர், லட்சுமி நகர், காகிதபுரம், கோவிலம்பாக்ம், சுண்ணாம்பு கொளத்துார் செல்லும் பிரதான வழித்தடமாக, இச்சாலை விளங்குகிறது.

தினசரி ஆயிரக்கணக்கான இரு, நான்கு சக்கர வாகனங்கள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றன. சில மாதங்களாக, மடிப்பாக்கத்தில் மழைநீர் வடிகால் பணிகள் நடந்து வருகின்றன.

மடிப்பாக்கம் பேருந்து நிலைய ஆவின் பூத்தில் இருந்து குணாலம்மன் கோவில் வரை அம்பேத்கர் சாலை, மிகவும் குறுகலாக காணப்படும். இந்நிலையில், குணாலம்மன் கோவில் அருகில், மழைநீர் வடிகாலுக்காக கடந்த மாதம் சாலை தோண்டப்பட்டது.

அதன் பின், எந்த பணியும் நடக்கவில்லை. தோண்டிய பள்ளத்திற்கு பாதுகாப்பு பணியும் மேற்கொள்ளவில்லை. இந்த பள்ளத்தால், அச்சாலையில் காலை, மாலை நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. திறந்தவெளி பள்ளத்தால் விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது.

எனவே, விபரீதம் நிகழும் முன், பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும். அதேநேரம் போக்குவரத்து நிறைந்த அச்சாலையில் பணிளை விரைந்து முடித்து சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us