sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

திரிபுரா வாலிபர்களுக்கு கஞ்சா வழக்கில் 10 ஆண்டு சிறை

/

திரிபுரா வாலிபர்களுக்கு கஞ்சா வழக்கில் 10 ஆண்டு சிறை

திரிபுரா வாலிபர்களுக்கு கஞ்சா வழக்கில் 10 ஆண்டு சிறை

திரிபுரா வாலிபர்களுக்கு கஞ்சா வழக்கில் 10 ஆண்டு சிறை


ADDED : மே 18, 2024 12:18 AM

Google News

ADDED : மே 18, 2024 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை, சோழிங்கநல்லுார் பழைய கடற்கரை சாலை பொன்னியம்மன் கோவில் அருகே, மூன்று பேர் கஞ்சா விற்பதாக, 2021 நவ.,15ல் செம்மஞ்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அங்கு சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்றிருந்த நபர்களை பிடித்தனர். பின், அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், அவர்கள் மேற்கு திரிபுரா மாநிலம் சோனாபூரைச் சேர்ந்தவர்களான மாமன் மியா, 22, ஜாகிர் ஹொசைன், 21, சுமன் அக்தர், 21, என்பது தெரியவந்தது.

மேலும், அவர்கள் அளித்த தகவலின்படி, வீட்டில் மறைத்து வைத்திருந்த 24 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

வழக்கில் தொடர்புடைய சுமன் அக்தர் தலைமறைவானதால், மற்ற இருவர் மீதான வழக்கு விசாரணை, போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான 2வது கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜூலியட் புஷ்பா முன் விசாரணைக்கு வந்தது. போலீசார் சார்பில், சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.நந்தகோபால் ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, ''குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பு நிரூபித்துள்ளது. எனவே, குற்றம்சாட்டப்பட்ட மாமன் மியா, ஜாகிர் ஹொசைன் ஆகிய இருவருக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது,'' என தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us